காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு |
சமீபத்தில் மலையாள திரை உலகை சேர்ந்த பல நடிகைகள் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பிரபல நடிகர்களிடம் பல வருடங்களுக்கு முன்பு தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி வருவதுடன் காவல் துறையிலும் புகார் அளித்து வருகின்றனர்.
அப்படி கூறியவர்களில் ஒரு நடிகை மட்டும் நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார். இதனால் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகைகளின் இந்த குற்றச்சாட்டுகளுக்கும் புகார்களுக்கும் பலர் ஆதரவாக குரல் கொடுத்தாலும் ஒரு சிலர் இது பழிவாங்கும் நடவடிக்கை என்றும், வாய்ப்புகள் வேண்டாம் என்றால் நாம் தான் ஒதுங்கி செல்ல வேண்டும் அதற்கு இணங்கி செல்லக்கூடாது என்பது போன்று எதிர்மறையாகவும் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
குறிப்பாக திரையுலகத்தில் இருந்தே இதுபோன்று எதிர்ப்பு குரல் ஒலிக்கிறது என்றால் ஆச்சரியம் தான். இந்த வகையில் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படம் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ள மலையாள நடிகை சுவாசிகா மற்றும் நடிகை பீனா ஆண்டனி, நடிகர் மனோஜ் ஆகிய மூவரும் ஒரு யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியின் போது சம்பந்தப்பட்ட சில நடிகைகளின் புகார் குறித்தும் அவர்களது செயல்கள் குறித்தும் விமர்சிக்கும் விதமாக பேசி உள்ளனர். இதனை தொடர்ந்து இவர்கள் பெண்களின் மாண்பை இழிவு படுத்துகின்றனர் என்று கூறி ஏற்கனவே நடிகர்கள் மீது புகார் அளித்த அதே நடிகை இவர்கள் மூவரின் மீதும் போலீசில் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெண்களை அவதூறாக பேசுதல் என்கிற வழக்கில் இவர்கள் மூவர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.