'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகில் நடிகைகள் பலர் பாலியல் ரீதியாக சந்திக்கும் தொந்தரவுகள் குறித்து வெளிச்சம் போட்டி காட்டியது. இதைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ஒருவர், பிரபல குணசித்திர மற்றும் வில்லன் நடிகர் ஆன நடிகர் சித்திக் மீது திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கேரள நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் சில நாட்கள் தலைமறைவாக இருந்த சித்திக் உச்ச நீதிமன்றத்தை நாடி தன்னை கைது செய்வதற்கான இடைக்கால தடை உத்தரவை பெற்றார்.
அதேசமயம் உச்சநீதிமன்றம் போலீஸ் விசாரணைக்கு சித்திக் ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது சித்திக்கிடம் போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரித்து வருகின்றனர். இரண்டு நாட்களாக நடந்த இந்த விசாரணையின்போது பெரும்பாலும் சித்திக் எந்த கேள்வி கேட்டாலும் தனக்குத் தெரியாது அல்லது ஞாபகம் இல்லை என்பது போல திருப்பித் திருப்பி பதில்களை கூறி வருகிறாராம். இதனால் போலீசார் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறி அவரது ஜாமீனை ரத்து செய்து அவரை கைது செய்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள் என்று போலீசார் தரப்பில் செய்தி வெளியாகி உள்ளது.