மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை | ஓடிடியில் ஜொலிக்குமா யோகி பாபுவின் 'லெக் பீஸ்' | இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் இயக்குனர் கைது | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் கடவுளாக நடித்த சிவாஜி, ரஜினி, கமல் | அதிரடி காட்டும் விமலின் ஓம் காளி ஜெய் காளி | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க, கருணாநிதி வசனம் எழுதிய புராண படம் | வீர தீர சூரன் 5 நாள் வசூல் முழு விவரம் | சர்ச்சைகளுக்கிடையில் 200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்' | பிளாஷ்பேக்: “படித்த பெண்” திரைப்படப் பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் |
தமிழில் மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை பிரயாகா மார்டின். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பிரபல தாதா ஓம்பிரகாஷ் என்பவர் போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பான வழக்கில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார். அவர் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த நாட்களில் ஒரு பார்ட்டி நடந்ததாகவும் அதில் பிரயாகா கலந்து கொண்டதாகவும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் கண்டுபிடித்தனர்.
இது குறித்து பிரயாகாவிடமும் விசாரணை நடைபெற்றது. அதேசமயம் இப்படி ஒரு குற்றச்சாட்டு தன் மீது விழுந்ததுமே அது குறித்து விளக்கம் அளித்த பிரயாகா மார்டின், “அந்த ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் நான் கலந்து கொண்டது உண்மைதான். ஆனால் அது எனது நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் பார்ட்டி. அதில் தான் கலந்து கொண்டேன், அதன் பிறகு அங்கிருந்து வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்ததால் அந்த ஹோட்டலில் இரண்டு மணி நேரம் தங்கியிருந்து பின் கிளம்பி சென்றேன். ஆனால் அந்த ஹோட்டலில் இப்படி ஒரு தாதா தங்கி இருந்தார் என்பதோ அவர் பெயர் கூடவோ எனக்கு தெரியாது'' என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் போலீசார் விசாரணையில் பிரயாகா மார்ட்டின் கூறியது உண்மைதான் என்று உறுதியாகி அவர் இந்த விசாரணை வளையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில் பிரயாகாவுக்கு பக்கபலமாக நின்று சட்டரீதியான உதவிகளை செய்து கொடுத்தவர் மலையாள வில்லன் நடிகரான சாபுமோன் அப்துசமது தான். இவர் சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தில் ஆரம்ப காட்சிகளிலேயே போலீஸ் அதிகாரியான ரஜினிகாந்த்தால் என்கவுன்டரில் சுடப்பட்டு பலியாகும் ஒரு சிறிய தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் பிரயாகா மார்டினுக்கு தான் செய்த உதவி பற்றி கூறும்போது, “பிரயாகா என்னுடைய நீண்ட நாள் குடும்ப நண்பர். இப்படி ஒரு சிக்கலில் அவர் சிக்கி உள்ளார் என்று தெரிந்தபோது நம் மீது தவறு இல்லை என்றால் நாம் எங்கும் ஓடி ஒளியக்கூடாது தைரியமாக மீடியாவை எதிர்கொள்ள வேண்டும் என அவரிடம் கூறினேன். அது மட்டுமல்ல பல பேர் இந்த வழக்கில் எனக்கு உதவி செய்ய தயங்கியதுடன் என் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் கூட உனக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்று அறிவுரையும் கூற துவங்கினார்கள். ஆனாலும் சில நல்ல மனம் கொண்ட வழக்கறிஞர்கள் ஆலோசனையுடன் பிரயாகாவிற்கு என்னால் உதவி செய்ய முடிந்தது. தற்போது அவர் அந்த வழக்கு சர்ச்சையில் இருந்து சட்ட உதவியுடன் வெளிவரவும் முடிந்தது” என்று கூறியுள்ளார்.