ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ஆஸ்கர் விருதுக்கு அடுத்ததாக அதற்கு இணையாக கருதப்படுவது கிராமி விருதுகள் தான். வரும் பிப்ரவரி மாதம் 67வது கிராமி விருது விழா நடைபெற இருக்கிறது. இதற்காக உலகெங்கிலும் உள்ள படங்கள் பல்வேறு போட்டி பிரிவுகளில் கலந்து கொள்வதற்காக தங்களது படங்களை அனுப்பி வருகின்றன. இந்த நிலையில் மலையாளத்தில் இந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற 'மஞ்சும்மேல் பாய்ஸ்' மற்றும் பஹத் பாசில் நடித்த 'ஆவேசம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் கிராமி விருதுகளுக்கான இசைப்பிரிவு போட்டிகளில் கலந்து கொள்ள அனுப்பப்பட்டுள்ளன.
இந்த இரண்டு படங்களுக்குமே இசையமைத்தவர் இசையமைப்பாளர் சுஷின் சியாம். இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கு பின்னணி இசையும் பாடலும் முக்கிய பங்கு வகித்தன என்பதை மறுக்க முடியாது. சமீபத்தில் தான் இந்தப் படங்களை கிராமி விருதுகளுக்கு அனுப்பும் பணியை செய்து முடித்ததாக கூறியுள்ள அவர், விசுவல் மீடியாவுக்கான சிறந்த ஒலிப்பதிவு தொகுப்பு என்கிற பிரிவில் ஆவேசம் படத்தையும் சிறந்த ஒலிக்கோர்வை என்கிற பிரிவில் மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தையும் அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.