லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படங்களுக்கு இசை அமைப்பதோடு அதில் சம்பாதிக்கும் பணத்தை இசை தொடர்பான, சினிமா தொடர்பான நிறுவனங்கள் தொடங்கி முதலீடு செய்து வருகிறார். ஏற்கெனவே இசை பள்ளி நடத்தி வரும் ஏ.ஆர்.ரஹ்மான், கோடம்பாக்கத்திலும், புறநகரிலும் நவீன ஒலிப்பதிவு ஸ்டூடியோக்களை கட்டி உள்ளார். மும்பை மற்றும் லண்டனிலும் ரஹ்மானுக்கு சொந்தமான ஸ்டூடியோக்கள் உள்ளன.
சென்னை கும்பிடிபூண்டி அருகே உள்ள கவரப்பேட்டையில் ஏஆர்ஆர் பிலிம் சிட்டியை அமைத்துள்ளார். அங்கு தற்போது விர்சுவல் (மெய்நிகர்) எனப்படும் நவீன தொழில்நுட்பத்தில் படத்தை உருவாக்கும் 'யூஎஸ் ட்ரீம்' என்ற நவீன இசை தயாரிப்பு கூடத்தை திறந்துள்ளார். இதன் திறப்பு விழாவில் இயக்குனர்கள் மணிரத்னம், சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் நிருபர்களிடம் கூறும்போது 'ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம் ஆந்திரா, மும்பை ஆகிய இடங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவே முதல் முறை. ரயில் நிலையம், கோயில் போன்ற மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் வெளிப்புற படப்பிடிப்பிற்காக நீண்டநாட்கள் அனுமதி கிடைக்காத பட்சத்தில் அங்கு ஓரிருநாள் படப்பிடிப்பு நடத்திய பிறகு, பிரத்யேக தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எஞ்சிய படப்பிடிப்பை இந்த ஸ்டுடியோவில் முடித்து கொள்ளலாம்”என்றார்.