வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படங்களுக்கு இசை அமைப்பதோடு அதில் சம்பாதிக்கும் பணத்தை இசை தொடர்பான, சினிமா தொடர்பான நிறுவனங்கள் தொடங்கி முதலீடு செய்து வருகிறார். ஏற்கெனவே இசை பள்ளி நடத்தி வரும் ஏ.ஆர்.ரஹ்மான், கோடம்பாக்கத்திலும், புறநகரிலும் நவீன ஒலிப்பதிவு ஸ்டூடியோக்களை கட்டி உள்ளார். மும்பை மற்றும் லண்டனிலும் ரஹ்மானுக்கு சொந்தமான ஸ்டூடியோக்கள் உள்ளன.
சென்னை கும்பிடிபூண்டி அருகே உள்ள கவரப்பேட்டையில் ஏஆர்ஆர் பிலிம் சிட்டியை அமைத்துள்ளார். அங்கு தற்போது விர்சுவல் (மெய்நிகர்) எனப்படும் நவீன தொழில்நுட்பத்தில் படத்தை உருவாக்கும் 'யூஎஸ் ட்ரீம்' என்ற நவீன இசை தயாரிப்பு கூடத்தை திறந்துள்ளார். இதன் திறப்பு விழாவில் இயக்குனர்கள் மணிரத்னம், சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் நிருபர்களிடம் கூறும்போது 'ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம் ஆந்திரா, மும்பை ஆகிய இடங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவே முதல் முறை. ரயில் நிலையம், கோயில் போன்ற மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் வெளிப்புற படப்பிடிப்பிற்காக நீண்டநாட்கள் அனுமதி கிடைக்காத பட்சத்தில் அங்கு ஓரிருநாள் படப்பிடிப்பு நடத்திய பிறகு, பிரத்யேக தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எஞ்சிய படப்பிடிப்பை இந்த ஸ்டுடியோவில் முடித்து கொள்ளலாம்”என்றார்.