பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் நாளை (செப்-5) வெளியாக இருக்கிறது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அஜித்தை வைத்து அவர் மங்காத்தா படத்தை இயக்கியபோதே அடுத்ததாக விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட காலம் கழித்து அந்த நிகழ்வும் தற்போது நடந்துள்ளது. எல்லாம் இயக்குனர்களையும் போல இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆவல் எப்போதும் இருந்து வருகிறது. அவர் சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி இந்த கோட் படத்தின் கதையைக்கூட அவர் ரஜினிக்காகத்தான் எழுதியுள்ளார்.
இதில் ரஜினியின் மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷும் நடிப்பதாகத்தான் கதையை உருவாக்கி இருந்தார் வெங்கட் பிரபு. ஆனால் சில காரணங்களால் அப்படியே இந்த கதையை விஜய்யிடம் கூறி ஓகே வாங்கி விட்டாராம்.
கடந்த வருடங்களில் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் குடும்பத்திற்குள் ஏற்பட்ட சில சங்கடமான சூழல் காரணமாக இந்த இருவரையும் ஒன்றிணைத்து நடிக்க வைப்பதில் இருக்கும் நடைமுறை சிரமங்களை புரிந்து கொண்டு தான் வெங்கட் பிரபு இந்த முடிவை எடுத்திருப்பார் என்றே தெரிகிறது. இந்த படத்தில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிப்பதாக வெளியான தகவலை மேலே சொன்ன தகவலுடன் ஒப்பிட்டு பார்த்தால் வெங்கட் பிரபு கூறியிருப்பது சரிதான் என தெரிய வரும்.