ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் நாளை (செப்-5) வெளியாக இருக்கிறது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அஜித்தை வைத்து அவர் மங்காத்தா படத்தை இயக்கியபோதே அடுத்ததாக விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட காலம் கழித்து அந்த நிகழ்வும் தற்போது நடந்துள்ளது. எல்லாம் இயக்குனர்களையும் போல இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆவல் எப்போதும் இருந்து வருகிறது. அவர் சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி இந்த கோட் படத்தின் கதையைக்கூட அவர் ரஜினிக்காகத்தான் எழுதியுள்ளார்.
இதில் ரஜினியின் மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷும் நடிப்பதாகத்தான் கதையை உருவாக்கி இருந்தார் வெங்கட் பிரபு. ஆனால் சில காரணங்களால் அப்படியே இந்த கதையை விஜய்யிடம் கூறி ஓகே வாங்கி விட்டாராம்.
கடந்த வருடங்களில் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் குடும்பத்திற்குள் ஏற்பட்ட சில சங்கடமான சூழல் காரணமாக இந்த இருவரையும் ஒன்றிணைத்து நடிக்க வைப்பதில் இருக்கும் நடைமுறை சிரமங்களை புரிந்து கொண்டு தான் வெங்கட் பிரபு இந்த முடிவை எடுத்திருப்பார் என்றே தெரிகிறது. இந்த படத்தில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிப்பதாக வெளியான தகவலை மேலே சொன்ன தகவலுடன் ஒப்பிட்டு பார்த்தால் வெங்கட் பிரபு கூறியிருப்பது சரிதான் என தெரிய வரும்.