லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நேரடி அரசியலில் இறங்குகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 'தமிழக வெற்றிக் கழகம்' என கட்சியின் பெயரை அறிவித்தார். நேற்று கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் விஜய்யை வாழ்த்தி அவரது தாயாரான ஷோபா சந்திரசேகர் அளித்த பேட்டி:
என் மகன் விஜய். அவர் தனது மக்களுக்காக தொடங்கியிருக்கும் கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தும் விழா என்பது எனது மனதில் புதுவொளி பட்டொளி வீசி படபடவென பறக்கிறது. பரவசம் அடைகிறேன். விஜய் எதையும் அமைதியாக உள்வாங்கி, ஆர்ப்பரிப்பு இல்லாமல் ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த தெரிந்த பிள்ளை. அமைதியில் அவர் ஒரு கடல். 'சான்றோன் என கேட்ட தாய்' என்ற வள்ளுவன் வாக்கை ஏற்கனவே விஜய் எனக்கு பெற்று தந்திருக்கிறார்.
பெயரிலே வெற்றிக்கொண்ட நீ கட்சியிலும் வெற்றியை பெயராக வைத்துள்ளாய். திரையில் உன் முகம் பார்த்து உயர்த்திய மக்களுக்கு தரையில் நடந்து வந்து ஏதேனும் செய். எல்லாமும் செய். பசித்தோர் முகம் பார். மக்களை தேடி சென்று நேரில் சந்தி. அவர்களின் குறைகளை காது கொடுத்து கேள். அவர்களில் ஒருவனாக மாறு.
தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று. கண்ணியம் காப்பாற்று, ஈட்டிய செல்வம் தந்த மக்களுக்கு புரட்சிகர திட்டங்கள் தீட்டு. உன் அரசியல் பயணம், பணம் தாண்டிய லட்சிய பயணம் என்பதை ஊரே பாராட்டும்போது உள்ளம் நெகிழ்கிறேன். கயிற்றில் ஏறி, கம்பத்தில் உயர்ந்து, காற்றில் விரிந்து மலர்கள் பொழிந்து வானில் பறக்கும் உன் கொடி. உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி.
உன் நண்பா, நண்பிகளின் நம்பிக்கை நீ, உன் கழகத்தின் முதல் தொண்டன் நீ. இப்போது போல் எப்போதும் உண்மையாக இரு. வாகை சூடு விஜய். உன்னை வாழ்த்தி தமிழக வெற்றிக்கழகத்திற்கு வாக்களிக்க காத்திருக்கும் தாய்மார்களின் ஒருத்தி. ஏற்கனவே நான் ஒரு சி.எம். (செலிபிரட்டி மதர்), இனி நானும் ஒரு பி.எம்.(புரவுடஸ்ட் மதர்). இவ்வாறு அவர் கூறியுள்ளார்.