ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
நடிகர் விஷால், தனுஷ் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு, ஆக.,16 முதல் புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்தது. இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று (ஆக.,11) நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: இது மாதம் மாதம் நடக்கும் செயற்குழு கூட்டம் தான். படப்பிடிப்பை நிறுத்துவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்போம். அவர்களுடன் எங்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. இவ்வாறு கூறினர்.