அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நடிகர் விஷால், தனுஷ் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு, ஆக.,16 முதல் புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்தது. இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று (ஆக.,11) நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: இது மாதம் மாதம் நடக்கும் செயற்குழு கூட்டம் தான். படப்பிடிப்பை நிறுத்துவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்போம். அவர்களுடன் எங்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. இவ்வாறு கூறினர்.