போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
தெலுங்குத் திரையுலகத்தை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி. அவரது 'பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் இந்தியத் திரையுலகத்தையும் கடந்து உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களையும் வியக்க வைத்தது.
அவரது இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்தபடத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இப்படத்திற்கான முன்களத் தயாரிப்புப் பணிகள் கடந்த சில மாதங்களாகவே நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
இதனிடையே, இந்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் ஹைதராபாத்தில் ஒரு 'ஒர்க் ஷாப்' நடத்த உள்ளார்களாம். அவர்களுக்கு நடிகர் நாசர் நடிப்புப் பயிற்சித் தரப் போகிறார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிப்புடன் வசனப் பயிற்சி, உச்சரிப்பு பயிற்சி போன்றவையும் வழங்கப்பட உள்ளதாம்.
தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளவர் நாசர். ராஜமவுலியின் இயக்கத்தில் வந்த 'பாகுபலி' படத்தில் பிஜ்ஜல தேவா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.