சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ரீரிலீஸ் கலாசாரம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. சில முக்கிய படங்களை மறுபடியும் ரீரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த விதத்தில் ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்த 'பாகுபலி' படத்தை அக்டோபர் மாதம் ரீரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
'பாகுபலி 2' படம் வெளிவந்து நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 'பாகுபலி' ரீரிலீஸ் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா, “இந்த சிறப்பு நாளில், இந்த ஆண்டு அக்டோபரில், 'பாகுபலி' திரைப்படத்தை இந்திய மற்றும் சர்வதேச அளவில் மறுவெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது வெறும் மறுவெளியீடாக இருக்காது. இது எங்கள் அன்பான ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட ஆண்டாக இருக்கும். சில புதியவற்றுடன் அற்புதமான ஆச்சரியங்களை எதிர்பார்க்கக் காத்திருங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
'பாகுபலி' படத்தின் முதல் பாகம் 2015 ஜுலை 10ல் வெளியானது. இந்த வருட அக்டோபரில் அப்படத்தை ரீரிலீஸ் செய்யும் போது 10 ஆண்டுகள் நிறைந்திருக்கும். அதனால், அதன் 10வது ஆண்டு கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.