இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கமல்ஹாசன், சித்தார்த், ரகுர் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் 'இந்தியன் 2'. ஷங்கர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த படங்களுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகமான விமர்சனங்களும், கருத்துக்களும், மீம்ஸ்களும் வெளிவந்ததில்லை. ஆனால், 'இந்தியன் 2' படத்திற்கு அவையனைத்தும் தொடர்ந்து அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது. பலரும் பல்வேறு விதமாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஷங்கருக்கு ஆதரவாக '40 கதை கேட்டு தூங்கிய' புகழ் நடிகர் அஷ்வின் குமார் ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் கதாநாயகனாக அறிமுகமான 'என்ன சொல்லப் போகிறாய்' படத்தின் இசை வெளியீட்டின் போது, “40 கதைகளைக் கேட்டு தூங்கிவிட்டேன்,” என அவர் பேசினார். அப்போது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் அஷ்வின் குமார். இப்போது 'நொடிக்கு நொடி' படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
தனது இன்ஸ்டாவில் ஷங்கருக்கு ஆதரவு தெரிவித்து, “இந்திய சினிமாவிற்கு ஷங்கர் சார் கிப்ட், எப்போதுமே பெருமையுடன் இருப்பவர். இந்திய சினிமாவிற்கு பிரம்மாண்டத்தை அறிமுகப்படுத்திய அவர் மீது மரியாதையுடனும், அன்புடனும் இருங்கள். குறிப்பு : கீ போர்டு வாரியர்கள் அனைவருக்கும் இதை சமர்ப்பிக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவை அவர் ஸ்டோரியாக மட்டுமே போட்டிருப்பதால் அதில் யாராலும் கமெண்ட் செய்ய முடியாது. இருந்தாலும், அந்தப் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் அஷ்வினை விமர்சித்து வருகிறார்கள்.
இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்பது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 1948ல் வெளிவந்த 'சந்திரலேகா' உள்ளிட்ட சில பல படங்களில் அந்தக் கால இயக்குனர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை யாராவது அஷ்வினுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.