ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடப் போவதாக முதலில் அறிவித்திருந்தார்கள். ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால் படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்து டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள்.
தற்போதைய நிலவரப்படி அப்போதும் படம் வெளியாக வாய்ப்பில்லை என்கிறார்கள். அதனால், 2025ம் ஆண்டுக்கு படம் தள்ளிப் போனாலும் ஆச்சரியமில்லையாம். 'கல்கி 2898 ஏடி' படத்தின் வரவேற்பும், வசூலும் இந்தப் படக்குழுவினரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம். வேறொரு பிரம்மாண்டத்தை அந்தப் படத்தில் காட்டியிருந்தார்கள். அதற்கு ஈடாக 'புஷ்பா 2' படத்திலும் இருந்தால்தான் ரசிகர்களைக் கவர முடியும், பெரும் வசூலைக் குவிக்க முடியும் என்று ஆலோசித்து வருவதாகத் தகவல்.
டோலிவுட்டில் பரவி வரும் இந்தத் தகவல் உண்மையா, பொய்யா என்பது சில வாரங்களில் தெரிந்துவிடும்.