இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடப் போவதாக முதலில் அறிவித்திருந்தார்கள். ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால் படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்து டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள்.
தற்போதைய நிலவரப்படி அப்போதும் படம் வெளியாக வாய்ப்பில்லை என்கிறார்கள். அதனால், 2025ம் ஆண்டுக்கு படம் தள்ளிப் போனாலும் ஆச்சரியமில்லையாம். 'கல்கி 2898 ஏடி' படத்தின் வரவேற்பும், வசூலும் இந்தப் படக்குழுவினரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம். வேறொரு பிரம்மாண்டத்தை அந்தப் படத்தில் காட்டியிருந்தார்கள். அதற்கு ஈடாக 'புஷ்பா 2' படத்திலும் இருந்தால்தான் ரசிகர்களைக் கவர முடியும், பெரும் வசூலைக் குவிக்க முடியும் என்று ஆலோசித்து வருவதாகத் தகவல்.
டோலிவுட்டில் பரவி வரும் இந்தத் தகவல் உண்மையா, பொய்யா என்பது சில வாரங்களில் தெரிந்துவிடும்.