அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா? |
ஆரம்பகாலத்தில் திமுகவின் பிரசார பீரங்கிகளில் ஒருவராக இருந்தவர் காளிமுத்து. எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது திமுக.,வில் இருந்து பிரிந்து அவருடன் சென்றார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையிலும் இடம் பெற்றார்.
ஆனால் அவர் திரைப்படத்திற்கு பாடல் எழுதியது அதிகம் கவனிக்கப்படாத ஒன்று. காளிமுத்துவின் நெருங்கிய நண்பராக இருந்த இயக்குனர் மகேந்திரன் தான் இயக்கிய 'கண்ணுக்கு மை எழுது' என்ற படத்தில் அவரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.
இந்த படத்தில் அன்புமலர்களின், தாம்பாள சுந்தரியே, வாடா மல்லியே, சோகங்கள் என்ற பாடல்களை அவர் எழுதினார். இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாது.
பாட்டி, மகள், பேத்தியின் உறவை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் பானுமதி, சுஜாதா, வடிவுக்கரசி இவர்களுடன் சரத்பாபு நடித்திருந்தார். 1986ம் ஆண்டு வெளிவந்தது.