பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாள சினிமாக்களில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் கூட்டிக்கல் ஜெயசந்திரன். ராசலீலா, சாந்துப்பொட்டு, திளக்கம், சிரிக்குடுக்கா, வர்கம் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். 48 வயதான இவர் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த இவர், கோழிக்கோட்டில் உள்ள தனது உறவினர் ஒருவர் வீட்டுக்கு விருந்தினராக சென்றிருந்தபோது அங்கு பக்கத்து வீட்டில் இருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கோழிக்கோடு கசபா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் கூட்டிக்கல் ஜெயச்சந்திரன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக கூறி சிறுமியின் பெற்றோர் கோழிக்கோடு போலீஸ் கமிஷனர் மற்றும் கேரள டிஜிபியிடம் புகார் செய்து உள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் ஜெயச்சந்திரன் கைது செய்ப்படுவார் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.