ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேரளாவை சேர்ந்தவர் நடிகர் ஸ்ரீஜித் ரவி. மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‛கும்கி' படத்தில் பாரஸ்ட் ஆபிசராக நடித்தார். தொடர்ந்து வேட்டை, கதகளி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற சிறுமியர்கள் முன்பு காரில் இருந்தபடி தனது ஆடையை கழற்றி அநாகரீகமாக நடந்து கொண்டார். ஆனால் அந்த நபர் யார் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் சிசிடி காட்சிகளின் அடிப்படையில் காரை அடையாளம் கண்ட போலீசார் அந்த நபர் நடிகர் ஸ்ரீஜித் ரவி என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவர் மீது போலீசில் புகார் அளிப்பட்டதை தொடர்ந்து குழந்தைகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஸ்ரீஜித் ரவியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே ஸ்ரீஜித் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்துள்ளாராம். கடந்த 2016ம் ஆண்டும் இதே மாதிரியான வழக்கு ஒன்றில் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.