கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நடிகர் பிரித்விராஜ் பிஸியான நடிகராக மலையாளம் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படம் மூலமாக வெற்றிகரமான இயக்குனராகவும் மாறிய அவர், அதன்பிறகு மீண்டும் மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற படத்தை இயக்கினார். தற்போது மூன்றாவது முறையாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா தேவ் என்பவர் தற்போது குஜராத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இவர் வேறு யாருமல்ல.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படத்தில் பிரித்விராஜ் நடித்திருந்த வரதராஜ மன்னர் என்கிற கதாபாத்திரத்தில் சிறு வயது தோற்றத்தில் நடித்தவர் தான். அந்த படத்தில் இவரது நடிப்பு பிடித்து போய்விட தான் இயக்கும் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்து மலையாள திரையுலகிற்கு அவரை அழைத்து வந்து விட்டார் பிரித்விராஜ்.