டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை | சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? | 'ஹீரோ மெட்டீரியல்' இல்லை என்ற கேள்வி... : அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் |
மறைந்த பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் திலகனை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். விஜயகாந்த் நடித்த சத்ரியன் படம் மூலம் தமிழுக்கு வந்த அவர் முதல் படத்திலேயே தனது நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து தமிழில் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார். அவரது மகன் ஷம்மி திலகனும் மலையாள திரையுலகில் வில்லன் நடிகராக அறிமுகமாகி சமீபகாலமாக குணச்சித்திர நடிப்பிலும் புதிய பரிமாணம் காட்டி ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஷம்மி திலகனின் மகன் அபிமன்யுவும் தனது தாத்தா மற்றும் தந்தையின் வழியை பின்பற்றி நடிகராக திரையுலகில் நுழைந்துள்ளார். நடிகர் உன்னி முகுந்தன் மலையாளத்தில் கதாநாயகனாக நடித்த வரும் மார்க்கோ என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபிமன்யு. இந்த வாய்ப்பு தனக்கு நடிகர் உன்னி முகுந்தன் மூலமாகவே தேடி வந்தது என்று கூறும் அபிமன்யு, தனது தாத்தாவின் பெயரை தந்தை காப்பாற்றி விட்டார். இவர்கள் இருவரின் பெயருக்கு எந்த பாதிப்பும் வந்து விடாத அளவிற்கு அவர்களது பெயரை நானும் காப்பாற்றுவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.