சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
மறைந்த பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் திலகனை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். விஜயகாந்த் நடித்த சத்ரியன் படம் மூலம் தமிழுக்கு வந்த அவர் முதல் படத்திலேயே தனது நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து தமிழில் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார். அவரது மகன் ஷம்மி திலகனும் மலையாள திரையுலகில் வில்லன் நடிகராக அறிமுகமாகி சமீபகாலமாக குணச்சித்திர நடிப்பிலும் புதிய பரிமாணம் காட்டி ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஷம்மி திலகனின் மகன் அபிமன்யுவும் தனது தாத்தா மற்றும் தந்தையின் வழியை பின்பற்றி நடிகராக திரையுலகில் நுழைந்துள்ளார். நடிகர் உன்னி முகுந்தன் மலையாளத்தில் கதாநாயகனாக நடித்த வரும் மார்க்கோ என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபிமன்யு. இந்த வாய்ப்பு தனக்கு நடிகர் உன்னி முகுந்தன் மூலமாகவே தேடி வந்தது என்று கூறும் அபிமன்யு, தனது தாத்தாவின் பெயரை தந்தை காப்பாற்றி விட்டார். இவர்கள் இருவரின் பெயருக்கு எந்த பாதிப்பும் வந்து விடாத அளவிற்கு அவர்களது பெயரை நானும் காப்பாற்றுவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.