மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
வானவில், விருமாண்டி போன்ற பல படங்களில் நடித்தவர் அபிராமி. இடையில் சிலகாலம் சினிமாவை விட்டு விலகியவர் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். ராகுல் என்பவரை இவர் திருமணம் செய்த நிலையில் பெண் குழந்தை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதுபற்றிய தகவலை அன்னையர் தினமான இன்று அறிவித்துள்ளார்.
மகள் மற்றும் கணவருடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து அபிராமி வெளியிட்ட, ‛‛நானும் ராகுலும் கடந்தாண்டு கல்கி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தோம். அப்போது முதல் எங்கள் வாழ்க்கை அழகாக மாறியது. இன்று(மே 14) அன்னையர் தினத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவராக நான் கருதுகிறேன். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்,'' என குறிப்பிட்டுள்ளார்.