இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் வரலட்சுமி சரத்குமார். அவருக்கும் மும்பையைச் சேர்ந்த நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
சமீபத்தில் சென்னையில் உள்ள அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோருக்கு தன் குடும்பத்தாருடன் சென்று திருமண அழைப்பிதழ் தந்தார் வரலட்சுமி. அடுத்து ஐதராபாத் சென்று அங்குள்ள பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்தார்.
ஜூலை 2ம் தேதி வரலட்சுமி, நிக்கோலய் திருமணம் தாய்லந்து நாட்டில் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளார்களாம். அதற்கடுத்து ஜூலை 3ம் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம்.
திருமணத்திற்குப் பிறகும் வரலட்சுமி சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ளார்.