ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
இந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் என்றாலே அது ஹிந்தித் திரையுலகத்திற்கே போய்ச் சேரும். ஹிந்திப் படங்கள்தான் உலக அளவில் அதிகமான தியேட்டர்களில் வெளியாகின்றன. அதற்குப் பிறகு தமிழ், தெலுங்குப் படங்கள் இடம் பெறுகின்றன.
ஹிந்தியில் பல முன்னணி நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே சில பல கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள். படத்தின் வெற்றி, தோல்வி அவர்களைப் பெரிதும் பாதிப்பதில்லை. அதனால், அவர்களது சம்பளத்தில் இறங்கு முகம் என்பதே கிடையாது.
தற்போதைய தகவல்படி இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக தீபிகா படுகோனே இருக்கிறார். மற்ற முன்னணி நடிகைகளான ஆலியா பட், கங்கனா ரணாவத், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரை அவர் பின்னுக்குத் தள்ளி உள்ளார்.
பிரபல போர்ப்ஸ் பத்திரிகை, ஐஎம்டிபி-யுடன் இணைந்து நடத்திய ஆய்வில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே ஒரு படத்திற்கு 15 முதல் 30 கோடி வரை வாங்குகிறாராம். கங்கனா 15 கோடி முதல் 27 கோடி, பிரியங்கா 15 கோடி முதல் 25 கோடி, காத்ரினா கைப் 15 கோடி முதல் 25 கோடி, ஆலியா பட் 10 கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்குவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
தென்னிந்திய நடிகைகள் யாரும் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. இருப்பினும் நாம் விசாரித்த வரையில் நடிகை நயன்தாரா தான் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருக்கிறாராம். அவரது சம்பளம் 5 கோடி என்கிறார்கள்.