சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
சமூக வலைத்தளங்களில் தனது காதலி நடிகை பவித்ரா கவுடாவிற்கு தகாத மெசேஜ்கள் அனுப்பியும், துன்புறுத்தல் செய்தவருமான ரேணுகா சுவாமி என்பவரைக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். அவரது காதலி பவித்ரா, மற்றும் சிலரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளார்கள்.
இந்நிலையில் நடிகர் தர்ஷனின் மேனேஜர் ஸ்ரீதர் என்பவர் தர்ஷனின் பெங்களூரூ பண்ணையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனிமையில் இருப்பதால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் தற்கொலைககு முன்பா வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ரேணுகா சுவாமி கொலையில் அவருக்கும் தொடர்புள்ளதா என்று விசாரித்து வந்தார்கள். வழக்கு விசாரணையில் தன் குடும்பத்தை இழுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தர்ஷனிடம் இதற்கு முன்பாக மேனேஜர் ஆகப் பணி புரிந்த மல்லிகார்ஜூன் என்பவர் 2018ம் வருடம் முதல் காணாமல் போய்விட்டார். தர்ஷனின் சினிமா பணிகள் அனைத்தையும் அவர்தான் கவனித்து வந்தாராம். ஆனால், அவர் சினிமா வினியோகத்தில் ஈடுபட்டு நஷ்டமடைந்துள்ளார். தர்ஷன் பெயரைச் சொல்லி அவர் கடன் வாங்கியதாகவும் தெரிகிறது.
தற்போதைய மேனேஜர் ஸ்ரீதர் தற்கொலை செய்துள்ள நிலையில் காணாமல் போன முன்னாள் மேனேஜர் மல்லிகார்ஜூன் பற்றியும் தற்போது பேச ஆரம்பித்துள்ளார்கள்.
கொலை வழக்கில் சிக்கியுள்ள தர்ஷன் விவகாரம் தற்போது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.