ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி. இந்த நிலையில் தெலுங்கில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஆர்டிஐ என்கிற படத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி.
இந்த படத்தில் அவர் ஒரு மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவரது தந்தையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரவிசங்கருடன் ஒரு தற்கொலை வழக்கு சம்பந்தமாக நேருக்கு நேர் மோதுவது தான் படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகவே ஈடி.வி.வின் சேனலின் ஓடிடி தளத்தில் நேற்று (செப் 26) முதல் ஒளிபரப்பாகி உள்ளது.