டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

1980ல் மூடுபனி என்ற படத்தில் அறிமுகமானவர் மோகன். அதன் பிறகு ஒரு 10 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் நாயகனாக திகழ்ந்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்து வந்தன. கடந்த 15 ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தவர், தற்போது ஹரா என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஏழாம் தேதி திரைக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் மோகன், தான் அளித்த ஒரு பேட்டியில், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛சில்க் ஸ்மிதா நடித்த பெரும்பாலான படங்களில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் நிஜத்தில் அவர் ரொம்ப நல்லவர். அதோடு நல்ல நடிகை. நான் அவரது நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவரிடத்தில் நெருங்கி பழகி இருக்கிறேன். அப்போது அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்ததால் அவரிடத்தில் கால்ஷீட் கேட்டு தயாரிப்பாளர்கள் காத்துக் கிடந்தார்கள். ஆனபோதிலும் சில்க் ஸ்மிதா யாரிடத்திலும் அலட்டிக் கொள்ள மாட்டார். ரொம்ப சாதாரணமாக எளிமையாக இருக்கக் கூடியவர்'' என்று தெரிவித்துள்ளார் மோகன்.




