பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
1980ல் மூடுபனி என்ற படத்தில் அறிமுகமானவர் மோகன். அதன் பிறகு ஒரு 10 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் நாயகனாக திகழ்ந்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்து வந்தன. கடந்த 15 ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தவர், தற்போது ஹரா என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஏழாம் தேதி திரைக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் மோகன், தான் அளித்த ஒரு பேட்டியில், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛சில்க் ஸ்மிதா நடித்த பெரும்பாலான படங்களில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் நிஜத்தில் அவர் ரொம்ப நல்லவர். அதோடு நல்ல நடிகை. நான் அவரது நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவரிடத்தில் நெருங்கி பழகி இருக்கிறேன். அப்போது அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்ததால் அவரிடத்தில் கால்ஷீட் கேட்டு தயாரிப்பாளர்கள் காத்துக் கிடந்தார்கள். ஆனபோதிலும் சில்க் ஸ்மிதா யாரிடத்திலும் அலட்டிக் கொள்ள மாட்டார். ரொம்ப சாதாரணமாக எளிமையாக இருக்கக் கூடியவர்'' என்று தெரிவித்துள்ளார் மோகன்.