மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
1980ல் மூடுபனி என்ற படத்தில் அறிமுகமானவர் மோகன். அதன் பிறகு ஒரு 10 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் நாயகனாக திகழ்ந்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்து வந்தன. கடந்த 15 ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தவர், தற்போது ஹரா என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஏழாம் தேதி திரைக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் மோகன், தான் அளித்த ஒரு பேட்டியில், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛சில்க் ஸ்மிதா நடித்த பெரும்பாலான படங்களில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் நிஜத்தில் அவர் ரொம்ப நல்லவர். அதோடு நல்ல நடிகை. நான் அவரது நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவரிடத்தில் நெருங்கி பழகி இருக்கிறேன். அப்போது அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்ததால் அவரிடத்தில் கால்ஷீட் கேட்டு தயாரிப்பாளர்கள் காத்துக் கிடந்தார்கள். ஆனபோதிலும் சில்க் ஸ்மிதா யாரிடத்திலும் அலட்டிக் கொள்ள மாட்டார். ரொம்ப சாதாரணமாக எளிமையாக இருக்கக் கூடியவர்'' என்று தெரிவித்துள்ளார் மோகன்.