டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் புஷ்பா-2 படம் வெளியானபோது ஆந்திராவில் உள்ள சந்தியா திரையரங்கில் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதன் காரணமாக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனை கடுமையாக விமர்சித்ததோடு, தெலுங்கானாவில் நான் முதலமைச்சராக இருக்கும் வரை எந்த படங்களுக்கும் ஸ்பெஷல் ஷோவுக்கு அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைதாகி ஜாமினில் வந்துள்ளார். தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது.
இப்படியான நிலையில், 2025ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியாக உள்ள ராம் சரணின் கேம் சேஞ்சர், பாலகிருஷ்ணாவின் டக்கு மகாராஜ், வெங்கடேஷின் சங்கராந்திகி வஸ்துனம் போன்ற படங்களின் ஸ்பெஷல் ஷோக்களை திரையிடுவதற்கு ஆந்திரா அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதோடு இந்த மூன்று படங்களின் டிக்கெட் விலையும் உயர்த்தப்பட உள்ளதாம்.




