இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரம்பா தெலுங்கு படங்களில் அறிமுகமானார். பின்னர் 1993ல் பிரபு நடித்த 'உழவன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இரண்டாவது படமாக உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் அவர் தொடை அழகு காட்டி நடித்ததால் 'தொடை அழகி' ஆனார். அந்த படத்தில் இடம்பெற்ற 'அழகிய லைலா...' என்ற பாடலில் ஹாலிவுட் நடிகை மர்லின் மன்ரோ ஸ்டைலில் அழகு காட்டி நடித்தார். அந்த ஒரு காட்சிக்காக அந்த பாடல் ஹிட்டானது.
இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்களில் ஒரு காட்சியிலாவது தொடை அழகை காட்டுவார். அல்லது இயக்குனர்களே காட்ட வைப்பார்கள். சினிமாவில் புன்னகை அழகி, முகத்தழகி என பல நடிகைகள் இருந்தார்கள். முதலும் கடைசியுமான தொடை அழகி ரம்பா தான்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் 100 படங்களில் நடித்துள்ளார். 'மானாட மயிலாட' நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார். ரம்பா அவருடைய சகோதரர் வாசுவுடன் இணைந்து 'த்ரீ ரோசஸ்' என்ற தமிழ்த் படத்தைத் தயாரித்தார். இந்திரக்குமார் என்கிற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லான்யா, சாஷா, சிவின் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.
ரம்யாவுக்கு இன்று 47வது பிறந்த நாள்.