பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரம்பா தெலுங்கு படங்களில் அறிமுகமானார். பின்னர் 1993ல் பிரபு நடித்த 'உழவன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இரண்டாவது படமாக உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் அவர் தொடை அழகு காட்டி நடித்ததால் 'தொடை அழகி' ஆனார். அந்த படத்தில் இடம்பெற்ற 'அழகிய லைலா...' என்ற பாடலில் ஹாலிவுட் நடிகை மர்லின் மன்ரோ ஸ்டைலில் அழகு காட்டி நடித்தார். அந்த ஒரு காட்சிக்காக அந்த பாடல் ஹிட்டானது.
இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்களில் ஒரு காட்சியிலாவது தொடை அழகை காட்டுவார். அல்லது இயக்குனர்களே காட்ட வைப்பார்கள். சினிமாவில் புன்னகை அழகி, முகத்தழகி என பல நடிகைகள் இருந்தார்கள். முதலும் கடைசியுமான தொடை அழகி ரம்பா தான்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் 100 படங்களில் நடித்துள்ளார். 'மானாட மயிலாட' நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார். ரம்பா அவருடைய சகோதரர் வாசுவுடன் இணைந்து 'த்ரீ ரோசஸ்' என்ற தமிழ்த் படத்தைத் தயாரித்தார். இந்திரக்குமார் என்கிற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லான்யா, சாஷா, சிவின் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.
ரம்யாவுக்கு இன்று 47வது பிறந்த நாள்.