இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நேற்று 81வது பிறந்தநாள். இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது ஸ்டுடியோ முன்னால் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ரசிகர்களும் திரையுலகினரும் திரண்டனர். அவர்களை இளையராஜா சந்தித்தார். பலருடன்புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இளையராஜா மகளும், பின்னணி பாடகியுமான பவதாரினி உடல்நலக்குறைவு ஏற்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனால் இளையராஜா இந்த பிறந்தநாளில் உற்சாகமாக காணப்படவில்லை. பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் ''எல்லோரும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்கிறீர்கள். ஆனால் எனது மகளை நான் பறிகொடுத்த காரணத்தினால் எனக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை'' என்றார்.
இதனிடையே சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் துணை தூதர் ஒலெக் அவ்டீவ், இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இளையராஜாவின் பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துவதற்காக வந்தேன். அவர் ரஷ்யாவின் மிகச்சிறந்த நண்பர். மாஸ்கோவில் இளையராஜாவின் இசை கச்சேரியை நடத்த திட்டமிட்டுள்ளோம். ரஷ்ய இசை கலைஞர்களை வைத்து சிம்பொனி இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்துவார். இந்த நிகழ்ச்சியை வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.