ஒரே நேரத்தில் ஹிந்தி, மலையாளத்தில் தயாராகும் 'திரிஷ்யம் 3' ; துவங்கும் தேதி ரிலீஸ் தேதி இரண்டும் ஒன்றே | ராஜமவுலி பட ஈயை காப்பி அடித்ததாக மலையாள படக்குழுவினருக்கு லீகல் நோட்டீஸ் | போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் ; அபிடவிட் கேட்கும் கேரள தயாரிப்பாளர் சங்கம் | டைட்டிலை மாற்றச் சொல்லி சென்சார் நிர்பந்தம் ; தள்ளிப்போன சுரேஷ் கோபி பட ரிலீஸ் | ஆமதாபாத் விமானத்தில் பயணிக்காத சினிமா இயக்குனரும் விபத்தில் மரணம் ; ஒரு வாரத்திற்கு பின் கண்டுபிடிப்பு | குபேரா படத்திற்காகவும் தேசிய விருது பெறுவாரா தனுஷ்? | விமல் நடிக்கும் 36வது படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியது! | அடுத்த மாதத்தில் 'கருப்பு' படத்தின் மிகப்பெரிய விருந்து! ஆர். ஜே .பாலாஜி வெளியிட்ட தகவல் | ஒரே நாளில் முக்கிய சினிமா பிரபலங்களுக்குப் பிறந்தநாள் | நாகார்ஜுனாவுக்கு திருப்புமுனை தந்த 'குபேரா' |
மலையாளத்தில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஜீத்து ஜோசப் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தென்னிந்திய அளவில் தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை ஏற்படுத்தியவர். கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் இவர் இயக்கிய நேர் என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக பஹத் பாசில் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் ஜீத்து ஜோசப். பிரபல தயாரிப்பு நிறுவனமான e4 தயாரிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
நேர் திரைப்படத்தில் கதாசிரியராக பணியாற்றியதோடு அந்த படத்தில் வழக்கறிஞராக முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்த ஜீத்து ஜோசப்பின் உதவி இயக்குனரான சாந்தி மாயாதேவி தான் இந்த படத்திற்கும் கதை எழுதுகிறார். சமீபத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், அவர் ஜீத்து ஜோசப் டைரக்சனில் நடிப்பதாக வெளியான அறிவிப்பு அவரது ரசிகர்களை இன்னும் குஷிப்படுத்தி உள்ளது.