வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

மோகன்லால் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'தொடரும்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் நடித்துள்ள 'ஹிருதயபூர்வம்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் தெலுங்கில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'கண்ணப்பா' படமும் வரும் ஜூன் 27ல் ரிலீஸ் ஆகிறது. இது ஒரு பக்கம் இருக்க மோகன்லால், மம்முட்டி இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்த வரும் புதிய படம் ஒன்றும் தயாராகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். இதில் பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் எட்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெறத் துவங்கியுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் மோகன்லால் இலங்கை கிளம்பி சென்றார். அங்கே அவருக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அது மட்டுமல்ல நேற்று நடைபெற்ற இலங்கை பார்லிமென்டில் நிகழ்வுகளை நேரில் பார்க்கும் விதமாக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் மோகன்லால். பார்லிமென்டில் அவர் பெயர் சொல்லப்பட்டு அவருக்கு வரவேற்பும் அளிக்கப்பட்டது. இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது. அது மட்டுமல்ல இலங்கை பிரதமர் டாக்டர் ஹரிணி அமர சூர்யா, சபாநாயகர் டாக்டர் ஜெகத் விக்ரமாநாயகெ, துணை சபாநாயகர் டாக்டர் ரிஷ்வி சாலிஹ் மற்றும் பார்லிமென்டில் பொது செயலாளர் குஸாணி மோகனதீரா ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் மோகன்லால்.