அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
மலையாள திரையுலகில் சமீப நாட்களாக நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் அவரை வைத்து ‛வழக்கு' என்கிற படத்தை இயக்கியுள்ள சனல்குமார் சசிதரன் ஆகியோருக்கு இடையே இந்த படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக வார்த்தை மோதல் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்தாலும் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து விட்டதால் தனது இமேஜ் பாதிக்கும் என்று இந்த படத்தை வெளியிட டொவினோ தாமஸ் மறுக்கிறார் என்று சணல்குமார் சசிதரன் குற்றம் சாட்டினார். ஆனால் தியேட்டரில் வெளியிட்டால் இந்த படத்திற்கு நட்டம் வரும் என்றும் அதே சமயம் இயக்குனர் மீது உள்ள கெட்ட பெயரால் ஓடிடி நிறுவனங்கள் இந்த படத்தை வாங்க மறுக்கின்றன என்று விளக்கம் அளித்து இருந்தார் டொவினோ தாமஸ்.
இந்த நிலையில் டொவினோ தாமஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கிறார் என்கிற ஆத்திரத்தில், “ஒரு படம் என்பது பூட்டி வைப்பதற்காக அல்ல.. ரசிகர்கள் பார்த்து ரசிப்பதற்காகத்தான்..” என்று கூறி இதன் பிரிவியூ காபி லிங்க்கை தனது பேஸ்புக் பக்கத்தில் தயாரிப்பாளரின் அனுமதி இன்றி சமீபத்தில் பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் இயக்குனர் சணல்குமார். இவரது செயல் படத்தின் தயாரிப்பாளர்களிடம் மட்டுமின்றி திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து காப்பிரைட் சட்டத்தின்படி அவரது சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த படத்தின் பிரிவியூ காப்பி நீக்கப்பட்டது. மேலும் வழக்கு படத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள் அனுமதி இன்றி இயக்குனர் இப்படி படத்தின் பிரிவியூ காப்பியை பொதுவெளியில் வெளியிட்டது குறித்து அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர்.