நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? |
மலையாளத்தில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஜீத்து ஜோசப் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தென்னிந்திய அளவில் தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை ஏற்படுத்தியவர். கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் இவர் இயக்கிய நேர் என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக பஹத் பாசில் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் ஜீத்து ஜோசப். பிரபல தயாரிப்பு நிறுவனமான e4 தயாரிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
நேர் திரைப்படத்தில் கதாசிரியராக பணியாற்றியதோடு அந்த படத்தில் வழக்கறிஞராக முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்த ஜீத்து ஜோசப்பின் உதவி இயக்குனரான சாந்தி மாயாதேவி தான் இந்த படத்திற்கும் கதை எழுதுகிறார். சமீபத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், அவர் ஜீத்து ஜோசப் டைரக்சனில் நடிப்பதாக வெளியான அறிவிப்பு அவரது ரசிகர்களை இன்னும் குஷிப்படுத்தி உள்ளது.