பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வசந்த பாலன். ஆனால் அவரது சமீபத்திய படங்களான ஜெயில், அநீதி தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தற்போது வெப் தொடர் ஒன்றை இயக்கி உள்ளார். இதற்கு 'தலைமைச் செயலகம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பரத், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராதிகா மற்றும் சரத்குமாரின் ராடன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. வருகிற 17ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகும் இந்த தொடர் அரசியல் பற்றி பேசுகிறது. கதைப்படி தமிழக முதல்வர் அருணாசலம், தன் மீதான 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கை எதிர்கொள்கிறார். இதனால் அவரை சுற்றி உள்ளவர்கள், அவரை வழக்கில் சிக்க வைத்து விட்டு முதல்வர் பதவியை அடைய நினைக்கிறார்கள். இதற்கிடையில் ஒரு முக்கியமான அரசியல் கொலையும் நடக்கிறது. இவற்றை கொண்டு பொலிட்டிக்கல் த்ரில்லராக தொடரை உருவாக்கி உள்ளார் வசந்தபாலன்.