26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

'பேராண்மை' படத்தின் மூலம் கவனிக்கப்பட்டவர் சாய் தன்ஷிகா. அதன்பிறகு மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, கபாலி, விழித்திரு, காத்தாடி, இருட்டு உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக 'லாபம்' படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கு ஓரிரு படத்தில் நடித்தார்.
தற்போது 3 வருட இடைவெளிக்கு பிறகு 'தி புரூப்' என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். தன்ஷிகா தவிர ரித்விகா, அசோக், ருத்வீர்வரதன், இந்திரஜா, மைம் கோபி, மாரிமுத்து, ராஜசிம்மன், அஷ்மிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராதிகா மாஸ்டர் இயக்கியுள்ளார். கோல்டன் ஸ்டூடியோஸ் 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்த மாதம் 3ம் தேதி வெளியாகிறது.




