அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் | 150 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் |

நடிகர் விஷால், சாய் தன்சிகா திருமணம் ஆகஸ்ட் 29ம் தேதி நடக்க உள்ளது. திருமணத்துக்கு பின்னரும் சாய் தன்சிகா நடிப்பார் என விஷால் கூறிவிட்டார். அவர் கதைநாயகியாக நடித்த 'யோகிடா' விரைவில் ரிலீஸ் ஆகிறது. அதில் அதிரடி போலீஸ் அதிகாரியாக வருகிறார். அடுத்து திரைப்பட கல்லுாரி மாணவர் அசோக்குமார் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கப்போகிறார்.
ஒருவர் ஆழ்மனதில் நிலவும் அமைதி மற்றும் மனோதத்துவ ரீதியாக அணுகுவதே இந்த படத்தின் கரு. தன்ஷிகாவுடன் கீதா கைலாசம், சிம்ரன் குப்தா உட்பட பலர் நடிக்கிறார்கள். அந்தமான் மற்றும் அதை சுற்றியுள்ள தீவுகளான ஜாலிபாய், டிகிலிபூர் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடக்க உள்ளது. சமீபத்தில் நாகா இயக்கத்தில் தன்சிகா நடித்த 'ஐந்தாம் வேதம்' என்ற வெப்சீரியல் ஹிட்டானதும் குறிப்பிடத்தக்கது.