ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் |
நடிகர் விஷால், சாய் தன்சிகா திருமணம் ஆகஸ்ட் 29ம் தேதி நடக்க உள்ளது. திருமணத்துக்கு பின்னரும் சாய் தன்சிகா நடிப்பார் என விஷால் கூறிவிட்டார். அவர் கதைநாயகியாக நடித்த 'யோகிடா' விரைவில் ரிலீஸ் ஆகிறது. அதில் அதிரடி போலீஸ் அதிகாரியாக வருகிறார். அடுத்து திரைப்பட கல்லுாரி மாணவர் அசோக்குமார் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கப்போகிறார்.
ஒருவர் ஆழ்மனதில் நிலவும் அமைதி மற்றும் மனோதத்துவ ரீதியாக அணுகுவதே இந்த படத்தின் கரு. தன்ஷிகாவுடன் கீதா கைலாசம், சிம்ரன் குப்தா உட்பட பலர் நடிக்கிறார்கள். அந்தமான் மற்றும் அதை சுற்றியுள்ள தீவுகளான ஜாலிபாய், டிகிலிபூர் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடக்க உள்ளது. சமீபத்தில் நாகா இயக்கத்தில் தன்சிகா நடித்த 'ஐந்தாம் வேதம்' என்ற வெப்சீரியல் ஹிட்டானதும் குறிப்பிடத்தக்கது.