விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானது. சூரி கதையின் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
சமீபத்தில் சர்வதேச திரைப்படம் விழா ஒன்றில் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட்டன. முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்திருந்த கவுதம் மேனன் மற்றும் சேத்தன் இருவருமே தங்களது நடிப்பால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றனர். குறிப்பாக ஒரு கொடூரமான போலீஸ் அதிகாரியாக சேத்தனின் நடிப்பு படம் பார்த்த ரசிகர்களுக்கு ஆத்திரத்தை வரவழைக்கும் அளவிற்கு வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சூரி பேசும்போது, “இந்த இரண்டாம் பாகத்தில் சேத்தனின் அட்ராசிட்டி இன்னும் அதிகமாக இருக்கும். தயவு செய்து படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் ஒரு வாரம் அவரை வெளியில் எங்கும் விடாமல் வீட்டிலேயே அடைத்து வைக்குமாறு அவரது வீட்டாரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜாலியாக ஒரு கோரிக்கை விடுத்தார் சூரி. அந்த அளவிற்கு இந்த இரண்டாம் பாகத்திலும் சேத்தனின் கதாபாத்திரம் இன்னும் வலுவாக இடம் பெற்றுள்ளதாக சூரியின் பேச்சிலிருந்து தெரிகிறது.