டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானது. சூரி கதையின் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
சமீபத்தில் சர்வதேச திரைப்படம் விழா ஒன்றில் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட்டன. முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்திருந்த கவுதம் மேனன் மற்றும் சேத்தன் இருவருமே தங்களது நடிப்பால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றனர். குறிப்பாக ஒரு கொடூரமான போலீஸ் அதிகாரியாக சேத்தனின் நடிப்பு படம் பார்த்த ரசிகர்களுக்கு ஆத்திரத்தை வரவழைக்கும் அளவிற்கு வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சூரி பேசும்போது, “இந்த இரண்டாம் பாகத்தில் சேத்தனின் அட்ராசிட்டி இன்னும் அதிகமாக இருக்கும். தயவு செய்து படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் ஒரு வாரம் அவரை வெளியில் எங்கும் விடாமல் வீட்டிலேயே அடைத்து வைக்குமாறு அவரது வீட்டாரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜாலியாக ஒரு கோரிக்கை விடுத்தார் சூரி. அந்த அளவிற்கு இந்த இரண்டாம் பாகத்திலும் சேத்தனின் கதாபாத்திரம் இன்னும் வலுவாக இடம் பெற்றுள்ளதாக சூரியின் பேச்சிலிருந்து தெரிகிறது.




