ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு |
மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலமாக ரசிகர்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் நிவின்பாலி. தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து வந்தவர், சமீப காலமாக படங்களை சரியாக தேர்வு செய்யாமல் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். தற்போது தமிழில் ராம் இயக்கியுள்ள ஏழு கடல் ஏழுமலை மற்றும் மலையாளத்தில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வருஷங்களுக்கு சேஷம் ஆகிய படங்கள் நிவின்பாலிக்கு நம்பிக்கை தரும் படங்களாக உருவாகி உள்ளன.
இதில் வருஷங்களுக்கு சேஷம் படத்தின் இயக்குனர் வினீத் சீனிவாசன் தான் முதன்முதலாக தான் இயக்கிய மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்கிற படத்தின் மூலம் நிவின்பாலியை அறிமுகப்படுத்தியவர். தொடர்ந்து அவரை வைத்து சில படங்களை இயக்கியும் அவருடன் சில படங்களில் இணைந்து நடித்தும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தங்களது நட்பை அடைகாத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 11ம் தேதி வருஷங்களுக்கு சேஷம் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாக நடித்திருந்தாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிவின்பாலிக்கு இந்த படம் ஒரு வெற்றிகரமான கம் பேக் ஆக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் வினீத் சீனிவாசன்.