Advertisement

சிறப்புச்செய்திகள்

குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர்

28 மார், 2025 - 01:22 IST
எழுத்தின் அளவு:
Dulquer-Salmaan-was-chased-away-by-his-landlord-at-gunpoint

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013ல் மலையாளத்தில் வெளியான படம் ஏ.பி.சி.டி (அமெரிக்கன் பான் கன்பியூஸ்டு டெசி). இந்த படத்தை இயக்குனர் மார்ட்டின் பரக்கத் என்பவர் இயக்கியிருந்தார். படத்தின் கதைப்படி வெளிநாட்டில் சுகவாசியாக வசிக்கும் துல்கரை அவரது தந்தை இந்தியாவில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்த்துவிட்டு கட்டாயப்படுத்தி படிக்க அனுப்பி வைக்கிறார். அவரும் அவரது ஒன்றுவிட்ட சகோதரனும் இங்கே வந்து படிக்கும்போது நிறைய சிரமங்களை சந்திக்கின்றனர். அதன்பிறகு தந்திரமாக உபாயம் செய்து வெளிநாட்டுக்கு மீண்டும் திரும்பி செல்கின்றனர் என்பது தான் கதை. அதனால இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் அங்கே படப்பிடிப்பின் போது ஏற்பட்ட ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து அந்த படத்தில் பணியாற்றிய நடிகரும், கதாசிரியருமான தம்பி ஆண்டனி என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “நியூ ஜெர்சியில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பை நடத்தி வந்தோம். ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் நீடித்துக் கொண்டே சென்றது. இதனால் வீட்டின் உரிமையாளர் எங்கள் மீது கோபமானார். ஒரு நாள் திடீரென வீட்டிற்குள் நுழைந்த அவர் படக்குழுவினர் அனைவரையும் கெட்ட வார்த்தையால் திட்டி வெளியேறுங்கள் என்று கூறினார். அது மட்டுமல்ல வீட்டின் கீழ் தளத்திற்கு சென்ற அங்கிருந்த தன்னுடைய துப்பாக்கியை எடுத்து வந்தவர் பட குழுவினரை பார்த்து மிரட்டத் துவங்கினார். பலரும் அதிர்ந்து போய் காத்த துவங்கினார்கள்.

அந்த சமயத்தில் ஒரு அறையில் அமர்ந்திருந்த நடிகர் துல்கர் சல்மான் அடுத்த காட்சிக்காக தயாராகிக் கொண்டிருந்தார். அந்த அறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த வீட்டு ஓனரை பார்த்ததும், யார் நீங்கள் உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று துல்கர் சல்மான் கேட்க, உடனே இங்கு இருந்து வெளியேறு என்று வீட்டு உரிமையாளர் கத்தியுள்ளார். “நான் இந்த படத்தின் ஹீரோவாக நடிக்கிறேன்.. படப்பிடிப்பை முடிக்காமல் என்னால் வெளியேற முடியாது.. நீங்கள் படப்பிடிப்புக்கு இடைஞ்சல் கொடுக்காமல் வெளியேறுங்கள்” என்று துல்கர் சல்மான் கூறினார்.

இதனால் கோபமான வீட்டு உரிமையாளர் “நீ யாரா இருந்தாலும் எனக்கு அது பற்றி கவலை இல்லை. கெட் அவுட்” என்று கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என பயந்த இயக்குனர் மார்ட்டின் பரக்கத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான் இருவரும் இணைந்து துல்கர் சல்மானை பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர். அதன் பிறகு ஒரு வழியாக அந்த வீட்டு உரிமையாளரை சமாதானப்படுத்தி மீதி படப்பிடிப்பை முடித்துவிட்டு கிளம்பி வந்தோம்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ்மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Columbus -  ( Posted via: Dinamalar Android App )
31 மார், 2025 - 10:03 Report Abuse
Columbus In US, citizens have full unrestricted personal liberty. They can fire to defend themselves and their property.
Rate this:
Matt P - nashville,tn,ஐக்கிய அரபு நாடுகள்
30 மார், 2025 - 01:03 Report Abuse
Matt P அமெரிக்காவில் ஒருவரை துப்பாக்கி முனையில் மிரட்டுவதே சட்டத்துக்கு எதிரானதாக தான் இருக்கும். ஏன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை?
Rate this:
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
29 மார், 2025 - 05:03 Report Abuse
நிக்கோல்தாம்சன் பலருக்கும் ஹீரோவாக தெரிந்த துல்கர் உண்மையில் கேவலமான மனிதன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in