300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் மற்றும் ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதாரி. அதோடு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார். 2021ம் ஆண்டில் வெளியான மகா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்த போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது அதிதி ராவ் அளித்துள்ள ஒரு பேட்டியில், சித்தார்த்தை திருமணம் செய்ய கொள்ள நான் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. உடனே அதற்கு தயாராகி விட்டேன். அந்தளவுக்கு அவர் ஒரு நல்ல மனிதர். செயற்கை தனம் எதுவுமே கிடையாது. எப்பொழுதுமே ஒரே மாதிரியாக இருக்கக்கூடிய அன்பான மனிதர். எனக்கு நெருக்கமானவர்கள் என்றால் அவர்களை எனது வீட்டுக்கு வர வைத்து உபசரிப்பார். அவரது இந்த செயல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. நான் சித்தார்த்தை திருமணம் செய்து கொள்வதற்கு அவரது இது போன்ற நல்ல செயல்பாடுகள்தான் காரணம். மேலும் நாங்கள் திருமணம் செய்து கொண்ட போது எனக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லை. அந்த இடைவெளியில் திருமணம் செய்து கொண்டு இப்போது மீண்டும் அவரவர் பாதையில் நடிக்க தொடங்கி விட்டோம் என்று கூறியிருக்கிறார்.