‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி என்ற படத்தை நடித்துள்ளார் அஜித். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். கேங்ஸ்டர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நேரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் அளித்துள்ள ஒரு பேட்டியில், அடுத்த படமும் அஜித் உடன் அமைந்தால் மகிழ்ச்சியே, இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க போகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
அதனால் கார் பந்தயம் முடிந்து அஜித் குமார் திரும்பியதும் அவர் நடிக்கும் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களில் நடித்த அஜித், வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களில் அடுத்தடுத்து நடித்தார். அதேப்போல் குட் பேட் அக்லி படத்தை அடுத்து மீண்டும் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.