Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஏர்போர்ட்டில் தடையின்றி செல்ல தந்தையின் சலுகைகளை ரன்யா ராவ் பயன்படுத்தினார் ; அறிக்கை சமர்ப்பிப்பு

01 ஏப், 2025 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Ranya-Rao-used-her-fathers-privileges-to-travel-unhindered-at-the-airport-report-submitted


கடந்த மாதம் கன்னட நடிகை ரன்யா ராவ் விமானம் மூலம் அடிக்கடி தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'வாகா' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இவர்தான். கர்நாடக டிஜிபி ஆன ராமச்சந்திர ராவ் என்பவரின் வளர்ப்பு மகள் தான் ரன்யா ராவ். பெங்களூருவில் இருந்து துபாய்க்கு சென்று அடிக்கடி தங்கம் கடத்தி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார் ரன்யா ராவ். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இது குறித்த வழக்கு, சிறப்பு விசாரணை அதிகாரி கவுரவ் குப்தா என்பவர் தலைமையில் நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையின் போது விமான நிலையத்திற்குள் பாதுகாப்பு சோதனைகள் ஏதுமின்றி தாராளமாக சென்று வருவதற்கு தனது தந்தையின் பெயரை ரன்யா ராவ் பயன்படுத்தினார் என்பது இந்த விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ரன்யா ராவ் அடிக்கடி தனது தந்தையின் போலீஸ் வாகனத்தை பயன்படுத்தி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

தனது மகள் என்பதால் கெடுபிடிகள் காட்ட வேண்டாம் என்று ராமச்சந்திர ராவ் அங்குள்ள அதிகாரிகளுக்கு வாய்மொழியாக கூறியிருந்தார் என்றும் அதற்கான சிசிடிவி காட்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் ரன்யா ராவ் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டிருந்தார் என்பது தனக்குத் தெரியாது என்று வளர்ப்பு தந்தை டிஜிபி ராமச்சந்திரன் கூறியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையை தற்போது கர்நாடக முதல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல்சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் ... இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் இயக்குனர் கைது இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Good Bad Ugly
    • குட் பேட் அக்லி
    • நடிகர் : அஜித் குமார் ,பிரசன்னா
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :ஆதிக் ரவிச்சந்திரன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,பிரசன்னா,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in