பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகர் கமல்ஹாசன், 'தக்லைப்' பட விழாவில் கன்னடம் தமிழிலிருந்து உருவானது என்று பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, வருகிற ஐந்தாம் தேதி திரைக்கு வரும் 'தக்லைப்' படத்தின் பேனர்களும் கிழித்து எறிந்து வருகிறார்கள். இதன் காரணமாக கர்நாடகாவில் இந்த படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அந்த படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு தடை விதிப்போம் என்று அந்த மாநிலத்தின் அமைச்சர்களும் கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில், ''தமிழிலிருந்து கன்னட மொழி பிறந்ததாக கமல்ஹாசன் கூறியிருப்பது கர்நாடகா மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறது. அதனால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சொல்லி அங்குள்ள கன்னட அமைப்பின் நிர்வாகி பிரவீன் ரெட்டி என்பவர் பெங்களூரு ஆர்.டி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது ஒரு புகார் அளித்துள்ளார். என்றாலும் அந்த புகார் அடிப்படையில் பெங்களூரு காவல் நிலையம் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.