தமிழிலிருந்து பிறந்த கன்னடம்… கமலுக்கு ஆதரவாக ரஜினிகாந்த், விஜய் அறிக்கை வெளியிடுவார்களா? | தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் பற்றிய வதந்தி : மறுத்த தம்பி | தீபிகாவுக்கு ஆதரவாகப் பேசினாரா அஜய் தேவ்கன்? | அயோத்தியில் நான்காவது 'மனை' வாங்கிய அமிதாப்பச்சன் | தெலங்கானா மாநில சினிமா விருது வென்ற எஸ்ஜே சூர்யா, நிவேதா தாமஸ் | கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்த 'ரெட்ரோ' படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் 45வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். அவருடன் திரிஷா, ஷிவதா, சுவாசிகா, நட்டி நடராஜன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், 'சூர்யா- 45வது படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடையப் போகிறது. மேலும் தற்போது படப்பிடிப்புக்கு நடுவே இறுதி கட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதனால் ஜூன் இரண்டு அல்லது மூன்றாம் வாரங்களில் இருந்து இந்த படத்திற்கான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும். முக்கியமாக இது செலிப்ரேஷன் படம் என்பதால் ஒரு பண்டிகை நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த படத்தின் டைட்டில் குறித்து தகவல் விரைவில் வெளியாகும்' என்கிறார் எஸ்.ஆர்.பிரபு.
படத்தை அக்டோபர் 1ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், அதே தேதியில் ரிலீஸ் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களா அல்லது வேறு தேதியை முடிவு செய்வார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.