டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' | நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினம் : பாலாஜி சக்திவேல் | பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் | பிளாஷ்பேக் : நல்லதங்காள் போன்று பெண்களை கதற வைத்த 'பெண் மனம்' | நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பஹத் பாசிலை பின்னுக்குத் தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்த 'ரெட்ரோ' படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் 45வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். அவருடன் திரிஷா, ஷிவதா, சுவாசிகா, நட்டி நடராஜன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், 'சூர்யா- 45வது படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடையப் போகிறது. மேலும் தற்போது படப்பிடிப்புக்கு நடுவே இறுதி கட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதனால் ஜூன் இரண்டு அல்லது மூன்றாம் வாரங்களில் இருந்து இந்த படத்திற்கான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும். முக்கியமாக இது செலிப்ரேஷன் படம் என்பதால் ஒரு பண்டிகை நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த படத்தின் டைட்டில் குறித்து தகவல் விரைவில் வெளியாகும்' என்கிறார் எஸ்.ஆர்.பிரபு.
படத்தை அக்டோபர் 1ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், அதே தேதியில் ரிலீஸ் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களா அல்லது வேறு தேதியை முடிவு செய்வார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.