அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் |

அயோத்தி படத்தின் வெற்றிக்குப் பிறகு அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்து கடந்த மே ஒன்றாம் தேதி திரைக்கு வந்த படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பத்தினர் இங்கு என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்ட கதையில் உருவான இந்த படம் பல திரைபிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றதோடு, திரைக்கு வந்த மூன்றே வாரங்களில் 75 கோடி வசூலித்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் குறித்து சசிகுமார் கூறும்போது, ''இப்பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் எப்படி முதலில் கதை சொன்னாரோ, அதை அப்படியே படமாக்கி இருக்கிறார். அவர் சொன்னதை அப்படியே உள்வாங்கி நானும் நடித்தேன். அதனால்தான் இந்த படத்தின் மூலம் எனக்கு இவ்வளவு புகழ் கிடைத்திருக்கிறது. இதற்கு காரணமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்தும் இந்த படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருக்கிறார். அவர் நடித்த அந்த வேடம் இந்த படத்திற்கு உணர்வுப்பூர்வமான ஒரு பலத்தை கொடுத்தது'' என்கிறார் சசிகுமார்.