மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கும் அவருடைய மாமா கார்த்திக்கிற்கும் கடந்த வாரம் கோலாகலமாக திருமணம் நடந்தது. இதன் வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் பலர் மோசமாக கமெண்ட் செய்துள்ளனர். இதனையடுத்து இதற்கு பதிலளித்த ரோபோ சங்கர், ‛ஆரம்பத்தில் நான் எவ்வளவு வலி வேதனையோடு போராடி வெற்றி பெற்றேன். .என்னுடைய உழைப்பால் தான் நான் இன்று இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறேன். நான் என் வாழ்க்கையை என்ஜாய் செய்கிறேன். ஒரே பொண்ணு அவ கல்யாணத்தை எனக்கு பிடித்தவாறு நடத்துகிறேன். இவ்வளவு செய்கிறார்கள் ஆனால், ஒரு வருஷத்தில் பிரிந்து போய்விடுவார்கள் என்று சொல்கிறார்கள்' என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.
அதன்பின் பேசிய ரோபோ சங்கரின் மருமகன், 'நாங்கள் உழைத்த பணத்தை வைத்து என்ஜாய் செய்கிறோம். அதில் சிலருக்கு என்ன கஷ்டம் வந்தது என்று தெரியவில்லை. சிலர் பொறாமையினால் தான் தப்பு தப்பா கமெண்ட் போடுறாங்க' என்று பேசியுள்ளார்.