300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் தமிழில் வாத்தி படத்தில் நடித்தார். தொடர்ந்து தெலுங்கிலும் நடிக்கிறார். மலையாள சினிமாவில் சமீபத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. இதைத்தொடர்ந்து மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக பல திரைப்பிரபலங்களும் பேசி வருகின்றனர். இதில் சில முன்னணி நடிகர்களின் பெயர்களும் உள்ளன. அவர்கள் மீது வழக்கும் பதிவாகி உள்ளது.
ஹேமா கமிட்டி போன்று மற்ற திரையுலகிலும் இதுபோன்று கமிட்டி அமைக்க வேண்டும் என்ற குரல்கள் எழ துவங்கி உள்ளன. இந்நிலையில் ஹேமா கமிட்டி பற்றி சம்யுக்தா கூறுகையில், ‛‛காட்டில் மாட்டிக் கொண்டு வழிதேடும் விதமாக தான் இன்றைய சினிமா உள்ளது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி சிலர் சுரண்டல்களில் ஈடுபடுகின்றனர். சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும். அதற்கு ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் ஒரு கேம் சேஞ்சராக மாறும்'' என்கிறார்.