25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தமிழில், நிமிர்ந்து நில், என்னை அறிந்தால், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி நாயர், அண்மையில் வெளியான கோட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சென்னையில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு தனது வீட்டில் விலை மதிப்புள்ள லேப்டாப், செல்போன், 2 கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். மேலும் இந்த பொருட்களை தனது வீட்டில் இரண்டு வருடமாக பணிபுரிந்து வந்த சுபாஷ் என்ற நபர் திருடிச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனடிப்படையில் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே சுபாஷும், தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது புகார் அளித்திருந்தார். அதில், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார். ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, பார்வதி நாயர், அவரது உதவியாளரும் அயலான் திரைப்பட தயாரிப்பாளருமான கொடப்பாடி ராஜேஷ் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.