படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் | அடுத்த வாரம் புதிய படங்களின் அப்டேட் வாரம் |
நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா தமிழில் விஜய்யின் ‛பிகில்' படத்தில் பாண்டியம்மா ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து கார்த்தியின் ‛விருமன்' படத்திலும் நடித்தார். சில மாதங்களுக்கு முன் கார்த்திக் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. அவர் தற்போது தனது கணவருடன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
அண்மையில் வெளியான எபிசோடின் புரொமோவில் இந்திரஜாவும் கார்த்திக்கும் தாங்கள் அப்பா அம்மா ஆவப்போவதாக சொல்ல நடுவர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறினர். இதனை தொடர்ந்து மேடைக்கு வந்த ரோபோ சங்கர் மிக இளவயதில் தாத்தாவான பிரபலம் நானாக தான் இருப்பேன் என்று எமோஷ்னலாக பேசினார். இதனையடுத்து அந்த தொலைக்காட்சியின் வழக்கமான டெம்பிளேட்டாக ஒரு மினி வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.