மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரபல சின்னத்திரை நடிகையான ராணி.ஒரு காலக்கட்டத்தில் வில்லி கதாபாத்திரங்களில் கொடிக்கட்டி பறந்தார். இப்போது போலீஸ் கேரக்டர் என்றாலே ராணி தான் என்கிற அளவுக்கு பல தொடர்களில் போலீஸாக நடித்துள்ளார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். ராணி படித்துக்கொண்டிருக்கும் போதே அவரது அம்மா இறந்துவிட்டாராம். அக்கா, தங்கைகள் இருந்ததால் கல்லூரியில் படிக்கும் போதே ராணிக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்களாம். அதன்பிறகு அவருக்கு மகன் பிறக்க, சீரியலில் நடிக்க வந்த ராணி இன்று வரை தன் குடுபத்திற்காக உழைத்து கொண்டிருக்கிறார். அதேசமயம் அவரது அப்பா ராணியின் வளர்ப்பு, படிப்பு, திருமணம் என எதையுமே பார்க்கவில்லை என மிகவும் சோகமாக பேசியுள்ளார். இது தான் ராணி தன் வாழ்வில் சந்தித்த மிகப்பெரிய சோகம் எனவும் கூறியுள்ளார்.