‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா தமிழில் விஜய்யின் ‛பிகில்' படத்தில் பாண்டியம்மா ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து கார்த்தியின் ‛விருமன்' படத்திலும் நடித்தார். சில மாதங்களுக்கு முன் கார்த்திக் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. அவர் தற்போது தனது கணவருடன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
அண்மையில் வெளியான எபிசோடின் புரொமோவில் இந்திரஜாவும் கார்த்திக்கும் தாங்கள் அப்பா அம்மா ஆவப்போவதாக சொல்ல நடுவர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறினர். இதனை தொடர்ந்து மேடைக்கு வந்த ரோபோ சங்கர் மிக இளவயதில் தாத்தாவான பிரபலம் நானாக தான் இருப்பேன் என்று எமோஷ்னலாக பேசினார். இதனையடுத்து அந்த தொலைக்காட்சியின் வழக்கமான டெம்பிளேட்டாக ஒரு மினி வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.