மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
1998ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சல்மான்கான் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது அங்கு 'சிங்காரா' என்ற அரிய வகை மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீண்ட நாட்களாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான்கான் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 22ம் தேதி இந்த வழக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கு சில மாதங்களில் முடிந்துவிடும் என்றும் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட தண்டணை குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே உடல்நலக்குறைவு, கொலை மிரட்டல் பிரச்னைகளுக்கு இடையில் இந்த வழக்கு சல்மானுக்கு மேலும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.