ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாகவே வெங்கட் பிரபுவின் ஆதர்ச நடிகர்களாக இருக்கும் பலரும் அவர் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று விடுவார்கள். அந்த வகையில் சரோஜா படத்தின் மூலம் வெங்கட் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் வைபவ் வழக்கம் போல இந்த கோட் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு நாள் விஜய், வெங்கட் பிரபுவிடம் எடுக்கப்பட இருக்கும் காட்சி குறித்து சீரியசாக தனது சந்தேகங்களை கேட்க அதற்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் வெங்கட் பிரபு. ஆனால் அருகில் இருந்த வைபவ்வோ இதுபற்றி எதுவும் புரியாதவர் போல அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது விஜய் அவரிடம் என்னடா முழிக்கிற உனக்கு எதுவும் சந்தேகம் இல்லையா என்று கேட்டுள்ளார்.
உங்களுக்கு கதை தெரியும்.. அதனால் நீங்கள் சந்தேகம் கேட்கிறீர்கள்.. எனக்கு கதை என்னவென்றே தெரியாது என்று கூற உடனே விஜய் சிரித்து விட்டாராம். படம் துவங்கி இத்தனை நாள் ஆகிவிட்டது இன்னுமா கதை தெரியவில்லை என்று கேட்க, அதற்கு வெங்கட் பிரபு அவனுக்கு எல்லாமே தெரியும் என்று கூறி சமாளித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த சுவாரசிய தகவலை கூறியுள்ளார் வைபவ்