மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாகவே வெங்கட் பிரபுவின் ஆதர்ச நடிகர்களாக இருக்கும் பலரும் அவர் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று விடுவார்கள். அந்த வகையில் சரோஜா படத்தின் மூலம் வெங்கட் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் வைபவ் வழக்கம் போல இந்த கோட் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு நாள் விஜய், வெங்கட் பிரபுவிடம் எடுக்கப்பட இருக்கும் காட்சி குறித்து சீரியசாக தனது சந்தேகங்களை கேட்க அதற்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் வெங்கட் பிரபு. ஆனால் அருகில் இருந்த வைபவ்வோ இதுபற்றி எதுவும் புரியாதவர் போல அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது விஜய் அவரிடம் என்னடா முழிக்கிற உனக்கு எதுவும் சந்தேகம் இல்லையா என்று கேட்டுள்ளார்.
உங்களுக்கு கதை தெரியும்.. அதனால் நீங்கள் சந்தேகம் கேட்கிறீர்கள்.. எனக்கு கதை என்னவென்றே தெரியாது என்று கூற உடனே விஜய் சிரித்து விட்டாராம். படம் துவங்கி இத்தனை நாள் ஆகிவிட்டது இன்னுமா கதை தெரியவில்லை என்று கேட்க, அதற்கு வெங்கட் பிரபு அவனுக்கு எல்லாமே தெரியும் என்று கூறி சமாளித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த சுவாரசிய தகவலை கூறியுள்ளார் வைபவ்