சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி | 'பத்த வைக்கும் பார்வைக்காரி' வைஷ்ணவி |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாகவே வெங்கட் பிரபுவின் ஆதர்ச நடிகர்களாக இருக்கும் பலரும் அவர் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று விடுவார்கள். அந்த வகையில் சரோஜா படத்தின் மூலம் வெங்கட் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் வைபவ் வழக்கம் போல இந்த கோட் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு நாள் விஜய், வெங்கட் பிரபுவிடம் எடுக்கப்பட இருக்கும் காட்சி குறித்து சீரியசாக தனது சந்தேகங்களை கேட்க அதற்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் வெங்கட் பிரபு. ஆனால் அருகில் இருந்த வைபவ்வோ இதுபற்றி எதுவும் புரியாதவர் போல அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது விஜய் அவரிடம் என்னடா முழிக்கிற உனக்கு எதுவும் சந்தேகம் இல்லையா என்று கேட்டுள்ளார்.
உங்களுக்கு கதை தெரியும்.. அதனால் நீங்கள் சந்தேகம் கேட்கிறீர்கள்.. எனக்கு கதை என்னவென்றே தெரியாது என்று கூற உடனே விஜய் சிரித்து விட்டாராம். படம் துவங்கி இத்தனை நாள் ஆகிவிட்டது இன்னுமா கதை தெரியவில்லை என்று கேட்க, அதற்கு வெங்கட் பிரபு அவனுக்கு எல்லாமே தெரியும் என்று கூறி சமாளித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த சுவாரசிய தகவலை கூறியுள்ளார் வைபவ்